கோறளைப்பற்று வடக்கு வாகரையில் 1087.5 கிலோ கிராம் பயறு விதைகள் கையளிப்பு
கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகத்தில் (14) இன்று விவசாய அமைச்சின் அனுசரணையின் கீழ் உப உணவு உற்பத்தியினை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட 226 பயனாளிகளுக்கான 1087.5 கிலோ பயறு விதைகள் 108 ஏக்கர் பயிர் செய்கை நிலத்தை இலக்காகக் கொண்டு இவ் ஆண்டிற்கான சாகுபடியினை அதிகரிப்பதற்காக வழங்கப்பட்டது.
இந் நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜெ.ஜெ முரளிதரன், மாவட்ட விவசாயப்பணிப்பாளர் ஜனாப் எம்.எப்.ஏ.ஸனீர் மற்றும் கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் எந்திரி.ஜீ.அருணன் உட்பட ஏனைய அலுவலகர்கள், பயனாளிகள் கலந்து கொண்டனர்.
 
Scroll To Top