கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டிற்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக்கூட்டம் இன்று (20.08.2024) காலை 10.00 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் உதவி பிரதேச செயலாளர் அர்ச்சனா புவேந்திரன் தலைமையில் இடம் பெற்றது. இன் நிகழ்வில் மாவட்ட பிரதம உள்ளக கணக்காய்வாளர் திருமதி காயத்திரி மற்றும் பிரதேச செயலக கணக்காளர்,பிரதித்திட்டமிடல் பணிப்பாளர், சமூர்த்தி முகாமையாளர் உட்பட ஏனைய உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.


















