கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகத்தின் ஒளி விழா நிகழ்வானது இவ்வருடமும் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி அர்ச்சனா புவேந்திரன் அவர்களின் தலைமையில் பிரதேச செயலக கலாச்சார மண்டபத்தில் மிகச் சிறப்பான முறையில் நடாத்தப்பட்டது.
அதிதிகளினால் மங்கல விளக்கேற்றப்பட்டதை தொடர்ந்து ஜெபத்தோடு ஆரம்பித்த நிகழ்வு ஆடல் பாடல் தேவ செய்தி என மிவும் சிறப்பாக இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து அலுவலக உத்தியோகத்தர்கள், பிரதேச சிறுவர்களால் கரோல் கீதம்,நடனம் போன்ற பல கலைநிகழ்வுகள் ஆற்றுகை செய்யப்பட்டதுடன் , நத்தார் தாத்தா வருகை மற்றும் நிழ்வுகளில் பங்குபற்றி பிள்ளைகளுக்கான பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் பிரதித்திட்டமிடல் பணிப்பாளர்,கணக்காளர் மற்றும் நிருவாக உத்தியோகத்தர் உட்பட அலுவலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
























