கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச இலக்கிய விழா 2022
கலாசார அலுவல்கள் திணைக்களமும் கோறளைப்பற்று வடக்க வாகரை பிரதேச செயலகமும் இணைந்து நடத்திய பிரதேச இலக்கிய விழாவானது 11/01/2023 திகதி புதன் கிழமை காலை 10.00 மணிக்கு வாகரை கலாசார மத்திய நிலைய மண்டபத்தில் பிரதேச செயலாளர் G. அருணன் தலைமையில் நடைபெற்றது
இந் நிகழ்வில் கோறளைப்பற்று பிரதேச செயலகத்தின் உதவிப்பிரதேச செயலாளர், கணக்காளர், நிருவாக உத்தியோகத்தர், சமுர்த்தி தலைமை முகாமையாளர் மற்றும் பாடசாலை அதிபர்கள் அதிதிகளாக கலந்து கொண்டனர்.
கலாசார ரீதியாக ஆரம்பிக்கப்பட்டட இன் நிகழ்வானது இப்பிரதேச பாரம்பரிய கலைஞர்கள் , கலைமன்ற இளைஞர்கள், அறநெறிப்பாடசாலை மாணவர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களின் பாரம்பரிய கலை வெளிப்படுத்தல்க காணப்பட்டதோடு வளர்நது வரும் இளங்கலைஞ்ஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் ஒரு தளமாகவும் காணப்பட்டது.
அத்தோடு 2022 ஆம் ஆண்டு பிரதேச இலக்கிய போட்டியில் பங்குபற்றி வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பரிசில்கள் மற்றும் சான்றுதல்கள் வழங்கி கைளரவிக்கப்பட்டதோடு பாரம்பரிய கலைக்காக தங்களை அர்பணித்து பாரம்பரிய கலையினை வளர்க்கின்ற கலைஞர்களுக்கு "கலைஞர் கௌரவம்" எனும் கௌரவத்தினை பொன்னாடை போர்த்தி மலர்மாலை, பரிசில்கள் வழங்கி அதிதிகள் கௌரவித்தனர்.


































