கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகத்தின் 2022 ஆம் ஆண்டுக்கான பதவியணியினர் நலன்புரிச்சங்க வருடாந்த ஒன்றுகூடல்
கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகத்தின் 2022 ஆம் ஆண்டுக்கான பதவியணியினர் நலன்புரிச்சங்க வருடாந்த ஒன்றுகூடல் மற்றும் சேவைநலன் பாராட்டு விழாவானது பனிச்சங்கேணி அரச சுற்றுலா விடுதியில் காலை 9.30 மணியளவில் பிரதேச செயலாளர் திரு. G.அருணன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் உதவிப்பிரதேச செயலாளர் திரு. G. பிரணவன், கணக்காளர் திருமதி.சந்திரகலா ஜெயந்திரா, சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திருமதி கலைவாணி கஜேந்திரன் , நிருவாக உத்தியோகத்தர் திரு.அப்துள் சமது ஜெமில், அலுவலக உத்தியோகத்தர்கள், அலுவலக உத்தியோகத்தர்களின் குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டதோடு இடமாற்றம் பெற்றுச் சென்ற முன்னால் கணக்காளர் திரு.து.ஜோர்ச் ஆனந்தராஜ் , முன்னால் உதவி திட்டமிடல் பணிப்பாளர் திரு.சுதாகரன் மற்றும் ஏனைய இடமாற்றம் பெற்றுச் சென்ற உத்தியோகத்தர்கள் இந் நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களாக கலந்து சிறப்பித்தனர்.
மங்கள விளக்கேற்றலோடு ஆரம்பித்து தொடர்ச்சியாக கலை நிகழ்வுகள், இடமாற்றம் பெற்றுச் சென்றவர்களுக்கான பாராட்டு மற்றும் கௌரவித்தல், கடந்த அரசாங்க அதிபர் கிண்ணத்தில் எல்லே போட்டியில் வெற்றியீட்டி முதலிடத்தைப் பெற்ற அணியினர் கௌரவிப்பு என நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.






























