நேர்மை வாரம் 2026 – நாள் 05
சுற்றாடல், வளம், கிராமிய மற்றும் சமூக வலுவூட்டல் – நேர்மையை வெளிப்படுத்தும் நாள்
31.07.2026
"நேர்மைக் கலாசாரம் – தூய்மையான இலங்கை" தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட நேர்மை வாரம் 2026 நிகழ்வுகளின் ஐந்தாவது நாள் நிகழ்ச்சியாக, கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலக வளாகத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் தூய்மையை மேம்படுத்தும் விசேட சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
இந்நிகழ்வில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அனைவரும் ஆர்வமுடன் பங்கேற்று, அலுவலகத்தின் வெளிப்புறச் சூழலை சுத்தம் செய்ததுடன், பொதுச் சுகாதாரத்தைப் பேணும் நோக்கில் டெங்கு நோய் பரவலைத் தடுக்கும் பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர். குறிப்பாக, டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய இடங்கள் அடையாளம் காணப்பட்டு சுத்தம் செய்யப்பட்டதுடன், மழைநீர் தேங்கும் பாத்திரங்கள், பயன்படுத்தப்படாத பொருட்கள் மற்றும் கழிவுப்பொருட்கள் அகற்றப்பட்டு, சுற்றுப்புறம் தூய்மையாக பராமரிக்கப்பட்டது.
மேலும், தூய்மையான பணிச்சூழல் உத்தியோகத்தர்களின் ஆரோக்கியத்தையும் பணித் திறனையும் மேம்படுத்துவதோடு, பொதுமக்களுக்கு சிறந்த சேவையை வழங்குவதற்கான நல்ல சூழலை உருவாக்கும் என்பதும் இந்நிகழ்வின் மூலம் வலியுறுத்தப்பட்டது. சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது ஒவ்வொருவரினதும் சமூகப் பொறுப்பாகும் என்பதையும், சுத்தமான சூழல் ஆரோக்கியமான சமூகத்திற்கான அடிப்படையாகும் என்பதையும் இந்நிகழ்வு எடுத்துக்காட்டியது.
நேர்மை என்பது அலுவலக நிர்வாகத்தில் மட்டுமன்றி, சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல், பொதுச் சொத்துக்களைப் பேணுதல் மற்றும் சமூக நலனை முன்னிறுத்தும் செயல்பாடுகளிலும் வெளிப்பட வேண்டும் என்ற செய்தியை இந்நிகழ்வு வலியுறுத்தியது.
"நிலையான நேர்மைமிக்க பசுமை கலாச்சாரம் "762867840 1575236604311193 2063893742141655085 n
Scroll To Top