08.08.2026 அன்று “Attama” வேலைத்திட்டத்தின் கீழ், காயங்கேணி பகுதியில் கடற்கரை சுத்தப்படுத்தும் சிரமதானப் பணி சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.
இந்நிகழ்வின் மூலம் கடற்கரைப் பகுதிகளில் காணப்பட்ட கழிவுகள் அகற்றப்பட்டு, சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் அவசியம் மற்றும் பொதுமக்களிடையே தூய்மையான சுற்றுச்சூழல் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நமது இயற்கை வளங்களை பாதுகாப்பது ஒவ்வொருவரினதும் பொறுப்பாகும். கடற்கரைகளில் குப்பைகளை வீசாமல், கழிவுகளை உரிய முறையில் அகற்றி, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அனைவரும் பங்களிப்போம்.
















