கோறளைப்பற்று வடக்கு வாகரையில் 540 பக்கற் அங்கர் பால்மா வழங்கிவைப்பு
கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகத்தில் (14) இன்று Fonterra கம்பனியின் அனுசரணையின் கீழ் தெரிவு செய்யப்பட்ட போசாக்கு அடைவு மட்டத்தில் பின் தங்கியுள்ள குழந்தைகள் மற்றும் பாலுட்டும் தாய்மார்களுக்கான 400 கிராம் கொள்ளளவையுடைய 540 அங்கர் பால்மா பக்கற்றுகள் வழங்கிவைக்கும் திட்டத்தின் கீழ் 270 பயனாளிகளுக்கான பால்மா வழங்கி வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜெ.ஜெ முரளிதரன்; மற்றும் கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் எந்திரி.ஜீ.அருணன் உட்பட ஏனைய அலுவலகர்கள், பயனாளிகள் கலந்து கொண்டனர்.
 
Scroll To Top