மட்டக்களப்பு மாவட்ட கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட 2024-2025 ஆம் ஆண்டுக்கான பெரும்போக நெற்பயிர்ச் செய்கை ஆரம்பக் கூட்டம் 2024.09.26 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 09.00 மணிக்கு கோறளைப்பற்று பிரதான மண்டபத்தில் பிரதேச செயலாளர் திருமதி. அமலினி கார்தீபன் அவர்களின் ஒழுங்கமைப்பில் மட்டக்களப்பு மேலதிக மாவட்ட செயலாளர்(காணி) திருமதி.என்.முகுந்தன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இதில் ஏனைய அரச உத்தியோகத்தர்கள், விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் என்போர் கலந்து கொண்டனர்.



















