நேர்மை வாரம் 2026 – நாள் 03
நேர்மைக் கலாசாரம் – தூய்மையான இலங்கை தேசிய வேலைத்திட்டம்
29.07.2026
நேர்மைக் கலாசாரம் – "தூய்மையான இலங்கை"தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், நேர்மை வாரம் 2026 நிகழ்வுகளின் மூன்றாம் நாள் நிகழ்ச்சியாக, தட்டுமுனை ஸ்ரீ கருமாரியம்மன் ஆலயத்தில் இன்று காலை அறநெறி பாடசாலை மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களுக்காக தியானம் மற்றும் ஆன்மீக நெறிமுறைகள் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் விளக்க நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் மட்/ககு/கதிரவெளி விக்னேஸ்வரா மகாவித்தியாலயத்தின் அதிபர் திரு. பொன். இராமச்சந்திரன் அவர்கள் வளவாளராக கலந்து கொண்டு, மாணவர்களிடையே நேர்மை, ஒழுக்கம், பொறுப்புணர்வு, பரஸ்பர மரியாதை குறித்து பயனுள்ள கருத்துரைகளை வழங்கினார்.
மேலும், ஆன்மீகப் பயிற்சிகள், தியானத்தின் முக்கியத்துவம் மற்றும் அறநெறி வழிமுறைகள் தனிநபர் பண்பாட்டை மேம்படுத்துவதோடு, நேர்மையான சமூகத்தை உருவாக்குவதிலும் முக்கிய பங்காற்றுகின்றன என்பதும் வலியுறுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் சமுர்த்தி சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பிரிவுக்கான சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அறநெறி பாடசாலை ஆசிரியர்கள், ஆலய பூசகர், ஆலய நிர்வாகத்தினர், மாணவர்கள், பெற்றோர் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
இத்தகைய விழிப்புணர்வு நிகழ்வுகள் மூலம் நேர்மை, நல்லொழுக்கம் மற்றும் சமூகப் பொறுப்புணர்வை அடுத்த தலைமுறையினரிடையே வளர்த்தெடுக்கும் முயற்சிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


















