Home

 

Create a post

 

Stories

 

Feed posts

 
நேர்மை கலாசாரம் – நடைபவனியில் கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பங்கேற்பு
நேர்மை வாரம் 2026 இன் இரண்டாவது நாளான இன்று, நேர்மை கலாசாரம் (Integrity Culture) கிளீன் ஸ்ரீலங்கா (Clean Sri Lanka) திட்டத்தின் கீழ் மட்டக்களப்பில் விழிப்புணர்வு நடைபவனி சிறப்பாக இடம்பெற்றது.
நேர்மை, பொறுப்புணர்வு, வெளிப்படைத்தன்மை மற்றும் ஊழல் இல்லாத சமூகத்தை உருவாக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நடைபவனியில், கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தமது ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்கினர்.
"இலஞ்சம் மற்றும் ஊழலை எதிர்ப்போம்" என்ற கருத்தை மக்களிடையே கொண்டு செல்லும் வகையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அரச உத்தியோகத்தர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து பங்கேற்றனர்.
இந்நடைபவனி மூலம் ஊழல் மற்றும் முறைகேடுகளைத் தடுப்பதற்கான விழிப்புணர்வை அதிகரித்தல், நேர்மையான சேவை கலாசாரத்தை மேம்படுத்தல் மற்றும் பொது சேவையில் நம்பிக்கையை கட்டியெழுப்புதல் போன்ற முக்கிய நோக்கங்கள் வலியுறுத்தப்பட்டன.WhatsApp Image 2026 07 28 at 12.53.51

நேர்மைக் கலாசார வாரம் 2026 – முதல் நாள் நிகழ்வு

(நிறுவன ரீதியான நேர்மையை மேம்படுத்தும் நாள்)

நேர்மைக் கலாசார வாரம் 2026 (27.07.2026 – 31.07.2026) நிகழ்வுகளின் முதல் நாளான நிறுவன ரீதியான நேர்மையை மேம்படுத்தும் நாள்"* இன்று கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலகம் – வாகரையில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டது.

காலை 9.00 மணிக்கு, பிரதேச செயலாளர் அவர்களின் தலைமையில் அலுவலகத்தின் அனைத்து உத்தியோகத்தர்களும் **நேர்மை உறுதிமொழியை எடுத்துக்கொண்டு, நேர்மையான, பொறுப்புணர்வுமிக்க மற்றும் மக்கள் மையப்படுத்தப்பட்ட அரச சேவையை வழங்குவதற்கான தங்களது உறுதிப்பாட்டை வெளிப்படுத்தினர்.

அதனைத் தொடர்ந்து, பிரதேச செயலாளர் அவர்களால் நேர்மைக் கலாசாரம் – தூய்மையான இலங்கை தேசிய செயற்பாட்டினை எமது அலுவலகத்தில் எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது. மேலும், அரச சேவையில் தரம், வினைத்திறன், வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை மேம்படுத்துதல், ஊழலற்ற மற்றும் முன்மாதிரியான நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்குதல், பொதுமக்களுக்கு நம்பிக்கைக்குரிய சேவையை வழங்குதல் ஆகிய விடயங்கள் குறித்து அலுவலக உத்தியோகத்தர்களுக்கு விழிப்புணர்வும் அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டன. மேலும் GN, CEO, SDO ஆகிய உத்தியோகத்தர்களும் தத்தமது பிரிவுகளில் நேர்மை சத்தியபிராமணத்தினை மேற்கொண்டனர்.

நேர்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் சிறந்த நிர்வாகம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, மக்களுக்கு தரமான சேவையை வழங்கும் நோக்கில் கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலகம் – வாகரை தொடர்ந்தும் உறுதியாக செயல்பட்டு வருகிறது.WhatsApp Image 2026 07 27 at 09.38.05 2WhatsApp Image 2026 07 27 at 09.38.02 1WhatsApp Image 2026 07 27 at 09.38.02WhatsApp Image 2026 07 27 at 11.23.11 1WhatsApp Image 2026 07 27 at 11.23.11

08.07.2026 அன்று  வாகரை VTA மையத்தில், VTA மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வுப் பயிற்சி அமர்வு நடத்தப்பட்டது.WhatsApp Image 2026 07 08 at 18.04.45

📢 23.07.2026

இன்று எமது கோரளைப்பற்று வடக்கு பிரதேச செயலகத்தின் வெளிப்புற சூழலில் டெங்கு ஒழிப்பு சிரமதானப் பணி வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.

அலுவலக வளாகத்தை சுத்தம் செய்தல், டெங்கு கொசுக்கள் பெருகக்கூடிய இடங்களை அகற்றல் மற்றும் தூய்மையான, ஆரோக்கியமான பணிச் சூழலை உருவாக்கும் நோக்கில் உத்தியோகத்தர்கள் அனைவரும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.WhatsApp Image 2026 07 23 at 10.55.53WhatsApp Image 2026 07 23 at 10.55.26WhatsApp Image 2026 07 23 at 11.53.05WhatsApp Image 2026 07 23 at 11.53.10WhatsApp Image 2026 07 23 at 11.53.05

DoHHcHHYYMMDD page 0003 1

DoHHcHHYYMMDD page 0001 1

අනු-ප්‍රවර්ගයන්

Scroll To Top