செய்திகள்
- பிரிவு: News & Events
பிரதேச சிறுவர் அபிவிருத்திக் குழு கூட்டம் 2023பிரதேச சிறுவர் அபிவிருத்திக் குழு கூட்டம் 2023
கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேசத்தின் சிறுவர் அபிவிருத்திக்குழுவின் செயலாளரும் ,சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தருமாகிய அ.அழகுராஜ் அவர்களின் ஏற்பாட்டில் பிரதேச செயலாளர் எந்திரி. G. அருணன் , தலைமயில் உதவிப் பிரதேசசெயலாளர் G. பிரணவன் பங்குபற்றுதலுடன் இவ்வருடத்திற்கான முதலாம் காலாண்டுக்கான பிரதேச சிறுவர் அபிவிருத்திக் குழுக் கூட்டம் இடம்பெற்றது. இக் கூட்டத்தில் இவ்வாண்டிற்கான சிறுவர் அபிவிருத்திபற்றி கலந்துரையாடப்பட்டது.













- பிரிவு: News & Events
'வளமான வழ்விற்கான முன்னாயத்தம் '
பாடசாலை மாணவர்களுக்கான கல்வியின் முக்கியத்துவம், போதைப்பொருள் பாவனை, இளவயதுகர்ப்பம், சிறுவர் துஷ்பிரயோகம் போன்றவற்றினைப்பற்றிய கலந்துரையாடல் நிகழ்வு. மட்/ககு/கதிரவெளி விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் 20.01.2023 அன்று இடம்பெற்றது. 'வளமான வழ்விற்கான முன்னாயத்தம் ' பாடசாலை மாணவர்களுக்கான கல்வியின் முக்கியத்துவம், போதைப்பொருள் பாவனை, இளவயதுகர்ப்பம், சிறுவர் துஷ்பிரயோகம் போன்றவற்றினைப்பற்றிய கலந்துரையாடல் நிகழ்வு. மட்/ககு/கதிரவெளி விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் 20.01.2023 அன்று இடம்பெற்றது. இதனை சௌபாக்கியா பராமரிப்பு பீடம் கிழக்கு பல்கலைக்கழகம் மற்றும் சுகாதார வைத்திய பணிமனையுடன் இணைந்து இந்நிகழ்வானது நடாத்தப்பட்டது.




- பிரிவு: News & Events
கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச இலக்கிய விழா 2022
கலாசார அலுவல்கள் திணைக்களமும் கோறளைப்பற்று வடக்க வாகரை பிரதேச செயலகமும் இணைந்து நடத்திய பிரதேச இலக்கிய விழாவானது 11/01/2023 திகதி புதன் கிழமை காலை 10.00 மணிக்கு வாகரை கலாசார மத்திய நிலைய மண்டபத்தில் பிரதேச செயலாளர் G. அருணன் தலைமையில் நடைபெற்றது
இந் நிகழ்வில் கோறளைப்பற்று பிரதேச செயலகத்தின் உதவிப்பிரதேச செயலாளர், கணக்காளர், நிருவாக உத்தியோகத்தர், சமுர்த்தி தலைமை முகாமையாளர் மற்றும் பாடசாலை அதிபர்கள் அதிதிகளாக கலந்து கொண்டனர்.
கலாசார ரீதியாக ஆரம்பிக்கப்பட்டட இன் நிகழ்வானது இப்பிரதேச பாரம்பரிய கலைஞர்கள் , கலைமன்ற இளைஞர்கள், அறநெறிப்பாடசாலை மாணவர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களின் பாரம்பரிய கலை வெளிப்படுத்தல்க காணப்பட்டதோடு வளர்நது வரும் இளங்கலைஞ்ஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் ஒரு தளமாகவும் காணப்பட்டது.
அத்தோடு 2022 ஆம் ஆண்டு பிரதேச இலக்கிய போட்டியில் பங்குபற்றி வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பரிசில்கள் மற்றும் சான்றுதல்கள் வழங்கி கைளரவிக்கப்பட்டதோடு பாரம்பரிய கலைக்காக தங்களை அர்பணித்து பாரம்பரிய கலையினை வளர்க்கின்ற கலைஞர்களுக்கு "கலைஞர் கௌரவம்" எனும் கௌரவத்தினை பொன்னாடை போர்த்தி மலர்மாலை, பரிசில்கள் வழங்கி அதிதிகள் கௌரவித்தனர்.



















- பிரிவு: News & Events
கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலக அலுவலக உத்தியோகத்தர்களுக்கான அரசகரும மொழி சிங்களம் - பயிற்சி நெறிகள் ஆரம்பம்
அரசகரும் மொழிகள் திணைக்களத்தின் ஒழுங்கமைப்பின் கீழ் கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகத்தின் அலுவலக உத்தியோகத்தர்களுக்கான அரசகரும மொழி சிங்களம் பயிற்சிகள் 19.01.2023 அன்று கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகத்தின் கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் திரு.G. அருணன் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது. இதன் வளவாளராக அரச கரும மொழிகள் திணைக்களத்தின் வளவாளர். திரு.M.M செய்நுதின் அவர்கள் கலந்து கொண்டு தொடர்சியான பயிற்சி நெறியினை வழிப்படுத்தினார்.









- பிரிவு: News & Events
கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகத்தின் 2022 ஆம் ஆண்டுக்கான பதவியணியினர் நலன்புரிச்சங்க வருடாந்த ஒன்றுகூடல்
கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகத்தின் 2022 ஆம் ஆண்டுக்கான பதவியணியினர் நலன்புரிச்சங்க வருடாந்த ஒன்றுகூடல் மற்றும் சேவைநலன் பாராட்டு விழாவானது பனிச்சங்கேணி அரச சுற்றுலா விடுதியில் காலை 9.30 மணியளவில் பிரதேச செயலாளர் திரு. G.அருணன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் உதவிப்பிரதேச செயலாளர் திரு. G. பிரணவன், கணக்காளர் திருமதி.சந்திரகலா ஜெயந்திரா, சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திருமதி கலைவாணி கஜேந்திரன் , நிருவாக உத்தியோகத்தர் திரு.அப்துள் சமது ஜெமில், அலுவலக உத்தியோகத்தர்கள், அலுவலக உத்தியோகத்தர்களின் குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டதோடு இடமாற்றம் பெற்றுச் சென்ற முன்னால் கணக்காளர் திரு.து.ஜோர்ச் ஆனந்தராஜ் , முன்னால் உதவி திட்டமிடல் பணிப்பாளர் திரு.சுதாகரன் மற்றும் ஏனைய இடமாற்றம் பெற்றுச் சென்ற உத்தியோகத்தர்கள் இந் நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களாக கலந்து சிறப்பித்தனர்.
மங்கள விளக்கேற்றலோடு ஆரம்பித்து தொடர்ச்சியாக கலை நிகழ்வுகள், இடமாற்றம் பெற்றுச் சென்றவர்களுக்கான பாராட்டு மற்றும் கௌரவித்தல், கடந்த அரசாங்க அதிபர் கிண்ணத்தில் எல்லே போட்டியில் வெற்றியீட்டி முதலிடத்தைப் பெற்ற அணியினர் கௌரவிப்பு என நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.






























