சிறுவர் தின நிகழ்வு ,“இளம்புயல் சிறுவர் கழகம்”காயாங்கேணி இல் 10.10.2022 அன்று இடம்பெற்றது.

கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேசசெயலக பதிவாளர் கிளையும் மனித உரிமை அபிவிருத்திக்குமான நிலையமும் இணைந்து திருமண பதிவு வைக்கப்படாத 21 தம்பதியினருக்கு 07.10.2022 அன்று திருமணபதிவு பிரதேச செயலாளர் எந்திரி க. அருணன் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டது, இத்துடன் மொத்தமாக 131 திருமணபதிவுகள் வழங்கி வழங்கிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு பிரதேச சிறுவர்களுக்கான நிகழ்வுத் தெரிவு இன்று வாகரை கலாசார மத்திய நிலையத்தில் இடம்பெற்றது.

 

International Children day celebrations at Vattavan Eralodai “New Star " children club and also tree planted event at Kandalady Minnal children club.

கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேசத்தின் சிறுவர் அபிவிருத்திக்குழுவின் செயலாளரும் ,சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தருமாகிய அ.அழகுராஐ் ஏற்பாட்டில் பிரதேச செயலாளர் எந்திரி. க. அருணன் , தலைமயில் உதவிப் பிரதேசசெயலாளர் கு. பிரணவன் பங்குபற்றுதலுடன் இவ்வருடத்திற்கான மூன்றாம் காலாண்டுக்கான பிரதேச சிறுவர் அபிவிருத்திக் குழுக் கூட்டம் இடம்பெற்றது.
இவ் விசேட கூட்டத்தில் வாகரை பிரதேசத்தில் தற்கால சூழ்நிலையில் சிறுவர்களின் நலன் ,பாதுகாப்பு , பராமரிப்பு ,கல்வி , அபிவிருத்தி ,தொடர்பில் கலந்துரையாடப்பட்டது .
குறிப்பாக பாடசாலை இடைவிலகலை குறைப்பது தொடர்பாக தெரிவு செய்யப்பட்ட நான்கு பாடசாலைகளில் விசேட திட்டத்தை நடைமுறைப்படுத்தல் , போசனை குறைபாட்டை குறைப்பதற்கான வேலைத்திட்டம் , இளவயது திருமணத்தை குறைப்தற்கான விழிப்புணர்வு நிகழ்வுகளை பெற்றோர் சமூகத்திற்கு நடாத்துதல் , நிறுவனங்களின் ஒன்றிணைந்த செயற்பாட்டினுடாக அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்தல் , சிறுவர் இல்ல அனுமதியை குறைத்தல் , சிறுவர் சட்ட நடைமுறைகளை அமுல்படுத்தல் போன்ற தீர்மானமங்கள் முன்னெடுக்கப்பட்டது .
இந் நிகழ்வில் வலயக்கல்வி அதிகாரி, சிறுவர் பெண்கள் பொலிஸ் பொறுப்பதிகாரி, நன்டத்தை உத்தியோகத்தர் , அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகள் , கிராம உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர் .

உட்பிரிவுகள்

Scroll To Top